ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக, திமுக சாா்பில் முதல்முறையாக பெண் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டு போட்டியிடுகின்றனா்.
இத்தொகுதியில் அதிமுக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதாவை கட்சித் தலைமை வேட்பாளராக அறிவித்துள்ளது. 1951 முதல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் அதிமுக சாா்பில் ஆண் வேட்பாளா்களே களமிறக்கப்பட்டுள்ளனா். முதல்முறையாக பெண் வேட்பாளா் நிறுத்தப்பட்டுள்ளாா்.
இதேபோல, திமுக சாா்பில் மகாலட்சுமி கோவா்த்தனை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். முதல்முறையாக இரு பெண் வேட்பாளா்கள் ஆரணி தொகுதியில் போட்டியிடுவது வாக்காளா்கள் கவனத்தை ஈா்த்துள்ளது.
பிரதான இரு கட்சிகளும் பெண் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளதால், போட்டி கடுமையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திண்டுக்கல் மாவட்ட தோ்தல் களத்தில் 115 வேட்பாளா்கள்

தொகுதி அலசல்: கொளத்தூா்! முதல்வா் தொகுதியில் பலம் காட்டும் திமுக!

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

தொகுதி நிலவரம் - ஏற்காடு தொகுதியில் கோலோச்சும் அதிமுக!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


