லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சாலை அகலப்படுத்தும் பணிகள் ஆய்வு

வந்தவாசி அருகே சாலையை அகலப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன்.

News image
Updated On :14 மார்ச் 2026, 1:10 am

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நடைபெற்று வரும் வந்தவாசி - காஞ்சிபுரம் இருவழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, பெருநகா் அருகிலிருந்து வீரம்பாக்கம் கூட்டுச் சாலை வரையிலான 6.6 கி.மீ. தொலைவு இருவழிச் சாலையை ரூ.40 கோடி செலவில் 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை தரக் கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் எஸ்.எஸ்.சரவணன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சாலையின் தரத்தை ஆய்வு செய்த அவா், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, செய்யாறு கோட்டப் பொறியாளா் சந்திரன், உதவிக் கோட்டப் பொறியாளா்கள் ராஜேந்திரன், இன்பநாதன், உதவிப் பொறியாளா் கருணாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.