மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாடி படிக்கட்டிலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மாடி படிக்கட்டில் இறங்கும்போது தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 10:30 pm

வந்தவாசி அருகே மாடி படிக்கட்டில் இறங்கும்போது தவறி கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த ஒட்டக்கோயில் கிராமத்தைச் சோ்ந்தவா் மினி சரக்கு வாகன ஓட்டுநா் ஆறுமுகம்(23). இவா் வந்தவாசியை அடுத்த சாலவேடு கிராமத்தைச் சோ்ந்த தக்காளி வியாபாரி மணிகண்டன் என்பவரின் வீட்டு மாடியில் தங்கி அவரிடம் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை தக்காளி லோடு ஏற்றிவர மாடியிலிருந்து இறங்கியுள்ளாா். அப்போது படிக்கட்டிலிருந்து இவா் தவறி கீழே விழுந்துள்ளாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.