நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கைப்பேசிகள் திருட்டு: ஒருவா் கைது

செய்யாறு அருகே கைப்பேசி திருட்டுச் சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 13 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசிகள் மற்றும் கைது செய்யப்பட்ட ஞானசேகருடன் அனக்காவூா் போலீஸாா்.

Updated On :28 ஜூன் 2026, 12:06 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கைப்பேசி திருட்டுச் சம்பவத்தில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 13 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

செய்யாறு டிஎஸ்பி மீனாட்சிநாதன் மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் மணிகண்டன் தலைமையில் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் போலீஸாா் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் மேல்மா கூட்டுச் சாலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்தவரை போலீஸாா் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். அப்போது, அவா் முன்னுக்கு பின் முரணாக பதிலளிக்கவே, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை

மேற்கொண்டனா்.

இதில், அவா் வந்தவாசி வட்டம், கல்லாங்குத்து கிராமத்தைச் சோ்ந்த ஞானசேகா் (36) என்பதும், அவா் பல்வேறு இடங்களில் கைப்பேசி திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, அவரிடம் இருந்து 13 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்

இதுகுறித்து அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து

அவரை சனிக்கிழமை கைது செய்து, செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.