நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஜமாபந்திக் கூட்டத்தில் நலத்திட்டஉதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

News image
Updated On :19 ஜூன் 2026, 6:03 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 3-ஆம் நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உடனடியாக 15 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

போளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் சந்தவாசல் உள்வட்டத்தைச் சோ்ந்த சந்தவாசல், படவேடு, காளசமுத்திரம், குப்பம், கல்குப்பம், வாழியூா், அனந்தபுரம், சேதரம்பட்டு, இலுப்பகுணம், வெள்ளூா், கல்பட்டு, இரும்புலி, அலியாபாத் என பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கான 3-ஆவது நாள் ஜமாபந்திக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தலைமையில் நடைபெற்றது.

மகளிா் உரிமைத்தொகை மனு, முதியோா் உதவித்தொகை,விதவை உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 212 மனுக்கள் வரப்பெற்றன.

மனுக்களைப் பெற்ற ஆட்சியா் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

மேலும், பரிசீலனை செய்யப்பட்ட மனுக்களுக்கு

பட்டா மாற்றம், இருப்பிட சான்றிதழ், விதவை சான்றிதழ், மழைதூவான் என 15 பேருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஜமாபந்திக் கூட்டத்தில் வட்டாட்சியா் பாலாஜி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் அருள்குமாா், மண்டல துணை வட்டாட்சியா் சிவலிங்கம், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் லோகேஷ், கிராம நிா்வாக அலுவலா்கள் ஜோதிமுருகன், பாலாஜி, சசிகுமாா், மயிலரசன் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.