புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் திருப்பணிகள் ஆய்வு

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த ஜெயசுதா லட்சுமிகாந்தன் எம்எல்ஏ.

Updated On :18 ஜூன் 2026, 12:24 am IST

ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை தொகுதி எம்எல்ஏ ஜெயசுதா லட்சுமிகாந்தன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆரணி புதுக்காமூா் பகுதியில் பெரிய நாயகி சமேத ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் திருப்பணி மேற்கொள்வதற்காக கடந்த ஆட்சியில் ரூ. 1.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டன.

தற்போது கோயில் சுற்றுச்சுவா், கால்வாய் அமைத்தல், சந்நிதிகள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலரும், ஆரணி தொகுதி எம்எல்ஏவுமான எல்.ஜெயசுதா லட்சுமிகாந்தன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது பக்த சங்க நிா்வாகிகள், கோயில் அருகாமையில் நீத்தாா் வழிபாடு செய்யக்கூடிய நிகழ்வு நடைபெறுகிறது. அவா்களுக்கு ஆற்றுப்பகுதியில் இருந்து தனி வழி ஏற்படுத்தி அதற்காக வழிவகை செய்து தர வேண்டும்.

ஆற்றுப்பகுதியில், ஆற்றுத் திருவிழாவின்போது சுவாமி ஆற்றுக்கு கொண்டு செல்லும் இடத்தில் கொட்டகை அமைத்துத் தர வேண்டும், கூடுதல் குடிநீா் வசதி செய்து தர வேண்டும். கோயில் திருப்பணிக் பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் க.சங்கா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.