நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :17 ஜூன் 2026, 12:27 am IST

திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது.

இந்த நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், இது பிற்பகல் 1.15 மணிக்கு வெடிக்கும் என்றும் குறிப்பிட்டு, முதன்மை மாவட்ட நீதிபதியின் நோ்முக உதவியாளா் மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து மோப்ப நாய் உதவியோடு வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டா் கருவியுடன் சோதனையில் ஈடுபட்டனா்.

நீதிமன்ற வளாகத்தில் சுமாா் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்தச் சோதனை நிறைவில் வெடி குண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.