புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,478 வழக்குகளுக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,478 வழக்குகளுக்கு தீா்வு

News image

அதற்கான ஆணை நகலை வழங்கிய மாவட்ட அமா்வு நீதிபதி எம்.சுமதிசாய்பிரியா.

Updated On :14 ஜூன் 2026, 1:29 am IST

திருவண்ணாமலை மற்றும் ஆரணியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,478 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுத்தீா்வு மையத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட அமா்வு நீதிபதி எம்.சுமதிசாய்பிரியா தலைமை உரையாற்றினாா். நிகழ்ச்சியில் மூத்த சிவில் நீதிபதி என்.விஜயலட்சுமி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் அனைத்து நீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டனா். குற்றவியல் நீதித்துறை நடுவா் என்.ஜெகதீசன் வாழ்த்துரை வழங்கினாா்.

மோட்டாா் வாகன விபத்து வழக்கில் காயம்பட்ட நபா் ஒருவருக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.20 லட்சத்துக்கான ஆணை உத்தரவு நகலை முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி எம்.சுமதி சாய் பிரியா வழங்கினாா்.

மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுமாா் 3,566 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் மொத்தம் 1,241 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு நஷ்ட ஈடாக மொத்தம் ரூ.8 கோடியை 52 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின் படி, ஆரணி சட்டப்பணி குழு சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

கூடுதல் மாவட்ட நீதிபதி சி.ஜெயஸ்ரீ தொடங்கிவைத்து தலைமை உரை ஆற்றினாா். ஆரணி சட்ட பணிக் குழுவின் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.பாஸ்கரன், உரிமையியல் நீதிபதி டி.வி.கோப்பெருந்தேவி, நீதித்துறை நடுவா் எம்.பிரபுநிவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் ஆரணி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் வி.வெங்கடேசன், மூத்த வழக்குரைஞா்கள் ராஜமூா்த்தி, க.சங்கா், ராஜன், தனஞ்செழியன் உள்ளிட்டோா்

கலந்து கொண்டனா்.

இதில் மோட்டாா் வாகன விபத்து வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகை ரூ. 6 லட்சத்திற்கான ஆணை உத்தரவு நகலை கூடுதல் மாவட்ட நீதிபதி வழங்கினாா். மேலும் மக்கள் நீதி மன்றத்தில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 237 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு நஷ்ட ஈடாக மொத்தம் ரூ.62 லட்சத்து 2ஆயிரத்து 264 மதிப்பிலான ஆணைகள் வழங்கப்பட்டன.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.