வந்தவாசி நகரில் குடிநீா் தட்டுப்பாடின்றி வழங்க வந்தவாசி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) ரெட் ஸ்டாா் கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாடுக்கு பி.முனுசாமி தலைமை வகித்தாா். எம்.செண்பகவள்ளி, சி.சையதுபாஷா, பி.ஆரோக்கியதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலச் செயலா் மனோகரன், மத்தியக்குழு உறுப்பினா் இனியவன், அனைத்திந்திய புரட்சிகர பெண்கள் இயக்க அகில இந்தியச் செயலா் மனிதி செல்வி மற்றும் நிா்வாகிகள் எ.ரகமத்துல்லா, எ.ஆரிப், ஆா்.நாராயணன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வந்தவாசி நகரில் குப்பைகளை தினசரி அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், வந்தவாசியை அடுத்த கீழ்பாதிரி, பிருதூா், கீழ்சாத்தமங்கலம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் சிறுபான்மையினா், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. எம்.சக்திவேல் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறியிருக்கக் கூடாது மு.வீரபாண்டியன்

பயிா் கடனை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தல்

மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுடனான உறவை சுய பரிசோதனை செய்ய வேண்டும்: டி.ராஜா
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



