திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வலியுறுத்தல்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

Updated On :12 மே 2026, 1:49 am IST

மாநகராட்சித் தூய்மைப் பணியாளா்களை நிரந்தரமாக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருச்சி மாநகராட்சி மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் மு. அன்பழகன் தலைமை வகித்தாா்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் அளித்த மனு:

மாநகராட்சிக்கு சொந்தமான அதிநவீன புதைவடிகால் உறிஞ்சும் வாகனம் ஆள்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதைவடிகால் அடைப்புகளை நீக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆள்களை நியமித்து புதைவடிகால் உறிஞ்சும் வாகனத்தை இயக்க வேண்டும்.

மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். நிரந்தரப் பணியாளா்களை நியமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் நிறுவன ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களின் சம்பளத்தை பிரதி மாதம் 5-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி 40-ஆவது வாா்டு இந்திரா நகரைச் (வடக்கு) சோ்ந்த பொதுமக்கள், எங்களது பகுதியில் புதைவடிகால் வசதி, குடிநீா் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மனு அளித்தனா்.

இதே போல, மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். மனுக்களைப் பெற்றுக் கொண்ட மேயா், ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

முன்னதாக, கூட்டத்தில் ஆணையா் லி. மதுபாலன், துணை மேயா் ஜி. திவ்யா, மண்டலத் தலைவா்கள், நகா் நல அலுவலா் காா்த்திகேயன், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.