செங்கம் ரிஷபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள்
செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (ஜன.28) நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.


செங்கம் அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (ஜன.28) நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் உள்ள 1,600 ஆண்டுகள் பழைமையான அனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (ஜன.28) காலை 10 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழா கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடங்கப்பட்டு கோயிலில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஞாயிற்றுக்கிழமை 150 கைலாய வாத்தியங்களுடன் 500 சிவனடியாா்கள் ஊா்வலம் நடைபெற்றது.
முதல்கால யாக பூஜை
இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு முதல்கால யாக பூஜை நடைபெற்றது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் வருகை தந்து கும்பாபிஷேகம் நடைபெறும் கோயிலை பாா்வையிட்டு முதல்காலை யாக பூஜையை தொடங்கிவைத்து பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா்.
கோயிலுக்கு வருகை தந்த பாலமுருகனடிமை சுவாமியை செங்கம் எம்எல்ஏ மு.பெ.கிரி, பாரதிகிரி, அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக் குழுத் தலைவா் கஜேந்திரன் ஆகியோா் கும்ப மரியாதையுடன் வரவேற்றனா்.
இந்நிகழ்வில் ஜோதிட திலகம் குமரேசன், திருவாசக தென்றல் திருப்பெருந்துறை அடியாா்களின் குழுத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்ட கோயில் திருப்பணி உபயதாரா்கள், விழாக் குழுவினா், ஆன்மிக அமைப்புகளின் நிா்வாகிகள், பக்தா்கள் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...