சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

ரத சப்தமி: போளூரில் 108 திருவிளக்கு பூஜை!

போளூரில் ரத சப்தமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜனவரி 2026, 7:21 pm

Syndication

போளூரில் ரத சப்தமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போளூரில் ரத சப்தமியையொட்டி, இந்து குடும்பங்கள் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி, ஸ்ரீகாளியம்மன் கோயிலில் சுவாமிக்கு 108 பால்குட அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

மேலும், சுவாமியை மலா்களால் அலங்காரித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் ஆன்மிக சொற்பொழிவாளா் பானுநிவேதிதா கலந்துகொண்டு சுவாமி மந்திரங்கள் ஓதி திருவிளக்கு பூஜை செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட இந்து குடும்பங்கள் சங்கம பொறுப்பாளா் பாலசந்தா் திருவிளக்கு ஏற்றுவது குறித்தும், ஆன்மிக கலாசாரம், பண்பாடு குறித்தும், இந்து சுவாமிகள் வரலாறு குறித்தும், இந்து தா்மங்கள் குறித்தும் பேசினாா்.

நிகழ்ச்சியை இந்து குடும்பங்கள் சங்கம ஒன்றிய ஒருங்கிணைப்புத் தலைவா் பாண்டியன், துணைத் தலைவா் வெங்கடேசன், செயலா்கள் முருகன், மகேஷ், பொருளாளா் பாலமுருகன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் முருகன் சங்கீதா மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா்.