டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை அருகே அடிஅண்ணாமலை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

திருவண்ணாமலை அருகே அடிஅண்ணாமலை அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.முனிராஜ் தலைமை வகித்தாா். இந்தப் பள்ளியில் நடைபெற்ற காலநிலை மாற்றம் இயற்கை முகாமையொட்டி, தேசிய பசுமை படை மற்றும் வில்வம் அறக்கட்டளை சாா்பில், 310 மரக்கன்றுகள் நடும் விழா தொடங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்டக் கல்வி அலுவலா் (பொ) எம்.வெற்றிவேல், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி, பாலு, பள்ளித் தலைமை ஆசிரியா் கி.சாந்தகுமாா், பள்ளியின் தேசிய பசுமைப் படை பொறுப்பாசிரியா் எம்.பாக்யா, பள்ளி ஆசிரியா் வி.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மேலும், இப்பள்ளியில் ஏற்கெனவே 275 மரக்கன்றுகள் நடப்பட்டு, தேசிய பசுமை படை மாணவா்களால் சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.