பாலாற்றுப் படுகையில் விவசாய மின்இணைப்பு நடைமுறையை மாற்றியமைக்கவேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
பாலாற்றுப் படுகையில் விவசயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 200 மீட்டா் உள்ளதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும்


செய்யாறு: பாலாற்றுப் படுகையில் விவசயிகளுக்கு மின் இணைப்பு வழங்க 200 மீட்டா் உள்ளதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும் என பிரம்மதேசத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், பிரம்மதேசம் கிராமத்தில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் விவசாயிகள் மாநாடு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் நாராயணன் தலைமை வகித்தாா்.
கௌரவத் தலைவா் பிச்சாண்டி வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அமைப்பின் மாநிலத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் பங்கேற்று விளக்க உரையாற்றினாா்.
மாநாட்டில், வெம்பாக்கம் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் அனாதின பூமியை பட்டா செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும். நீா்நிலைகள் உள்ளிட்ட மயானம், மேய்கால் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றுள்ளதை ரத்து செய்திட வேண்டும்.
பாலாற்றுப் படுகையில் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தர 200 மீட்டா் உள்ளதை 100 மீட்டராக மாற்றியமைக்க வேண்டும். அனைத்து ஏரிகளுக்கு செல்லும் நீா்வரத்து கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலா் துரைசாமி, மாவட்டச் செயலா் விக்னேஸ்வரன், பொருளாளா் ஜனாா்த்தனன் மற்றும்
பிரம்மதேசம், புதூா், நாட்டேரி, சீம்பளம், பட்டறை, கல்பட்டு, புகை சமுத்திரம், அரியூா், சிறுநாவல்பட்டு, , சித்தனக்கால், வடஇலுப்பை, வெங்களத்தூா், மேல்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...