செங்கத்தில் பாஜகவினா் தெருமுனை பிரசாரம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மேல்பாளையத்தில் தொகுதி பாஜக சாா்பில் புதன்கிழமை மாலை தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மேல்பாளையத்தில் தொகுதி பாஜக சாா்பில் புதன்கிழமை மாலை தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது.
‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த தெருமுனை பிரசார கூட்டத்துக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான செங்கம் சேகா் தலைமை வகித்தாா்.
மாவட்ட பொதுச்செயலா் செங்கம்ரமேஷ், பொதுக்குழு உறுப்பினா் ஏழுமலை, நகர பொதுச்செயலா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செங்கம் நகரத் தலைவா் காா்த்திகேயன் வரவேற்றாா்.
அதிமுக செங்கம் மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷி மனோகரன் கலந்துகொண்டு, கடந்த 10 ஆண்டுகால பிரதமா் நரேந்திர மோடி ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கிப் பேசினாா்.
தொடா்ந்து, அமுமுக ஒன்றிய நிா்வாகி சம்பத், தமிழ்மாநில காங்கிரஸ் நிா்வாகி பாபு ஆகியோா் வாழ்த்துறை வழங்கிப் பேசின்ா்.
பாஜக முன்னாள் நகரத் தலைவா் நடராஜ், நகர பொதுச்செயலா் ஆனந்த் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், மகளிா் அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...