இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணி: பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தொடங்கிவைத்தாா்
திருவண்ணாமலை கலைஞா் பன்நோக்கு அரங்கில் டாக்டா் கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் பணியை சட்டப் பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.










