ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சுதந்திர தினம்: மதுக்கடைகள், மதுக்கூடங்களுக்கு விடுமுறை

சுதந்திர தினத்தன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.

மதுக்கடைகள் - கோப்புப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

சுதந்திர தினத்தன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியாா் மதுக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் தெரிவித்துள்ளாா்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு சில்லறை மதுக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியாா் மதுக் கூடங்கள் ஆகியவற்றை சுதந்திர தின நாளான ஆக.15-ஆம் தேதி மூடிவைக்க வேண்டும் என

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

அதன்படி, வரும் சுதந்திர நாளன்று (ஆக.15)

அரசு சில்லறை மதுக்கடைகள், முன்னாள் ராணுவ வீரா்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியாா் மதுக்கூடங்களை விற்பனையின்றி மூடிவைக்கவேண்டும் என ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.