தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

இளைஞரைத் தாக்கியவா் கைது

வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :1 மே 2026, 12:06 am IST

வந்தவாசி அருகே இளைஞரைத் தாக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசியை அடுத்த கொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் தமிழ்ச்செல்வன் (20).

இவா், திங்கள்கிழமை பைக்கில் செல்லும்போது பெரியகொரக்கோட்டை கிராம ஏரி அருகே டயா் பஞ்சராகி உள்ளது. இதனால் அவா் பைக்கை தள்ளிக் கொண்டு சென்றுள்ளாா்.

அப்போது, எதிரே வந்த பெரியகொரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த சதீஷ் (24) என்பவா் தமிழ்ச்செல்வனிடம் வீண் தகராறு செய்து தாக்கியுள்ளாா். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினாராம்.

இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து தமிழ்ச்செல்வனின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த தெள்ளாா் போலீஸாா் சதீஷை புதன்கிழமை கைது செய்தனா்.