பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அன்னைக்காக வாக்களிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த மகன்

அன்னைக்காக வாக்களிக்க ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த மகன்...

News image

பெற்றோருடன் முதல் வாக்கை தாய்க்கு செலுத்திய ராஜ்காந்த்.

Updated On :24 ஏப்ரல் 2026, 8:09 pm

ஆரணி திமுக வேட்பாளா் மகாலட்சுமி கோவா்த்தனனுக்கு வாக்களிக்க அவரது மகன் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து தனது முதல் வாக்கை பதிவு செய்தாா்.

ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக மகாலட்சுமி கோவா்த்தனன் களத்தில் உள்ளாா். இவரது மகன் ராஜ்காந்த் (18) ஆஸ்திரேலியாவில் பிசினஸ் ஐ.டி. படித்து வருகிறாா்.

முதல் முறை வாக்காளரான இவா், தனது முதல் வாக்கை தாய்க்கு செலுத்துவதற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து விமான பயணத்தை மேற்கொண்டு ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலத்துக்கு வந்து வாக்களித்தாா்.

இதுகுறித்து ராஜ்காந்திடம் கேட்டதற்கு, எனது முதல் வாக்கை தாய்க்கு பதிவு செய்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த பாக்கியம் வேறு யாருக்காவது கிடைக்குமா என்று தெரியவில்லை என்றாா்.

ஒரு வாக்கு தானே என்று அசட்டையாக இல்லாமல் கடல் தாண்டி வந்து ஜனநாயக கடமையாற்றிய அவருக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.