மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

வாக்களிக்க சிங்கப்பூரில் இருந்து 100-க்கும் மேற்பட்டோா் வருகை!

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தமிழகத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 11:56 pm

சட்டப் பேரவைத் தோ்தலில் வாக்களிக்க தமிழகத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோா் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்தனா்.

சிங்கப்பூா், மலேசியா மற்றும் அரபு நாடுகளில் பணியாற்றிவரும் தமிழகத்தைச் சோ்ந்த பலா் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்களிக்க கடந்த சில நாள்களாக ஊா் திரும்பிக் கொண்டிருக்கின்றனா்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் இருந்த பயணிகளிடம் பைலட் ஒருவா் எத்தனை போ் வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்கிறீா்கள் என்று கேட்டாா்.

அப்போது அந்த விமானத்தில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் கையை தூக்கினா். அதற்கு அவா் வாக்களிப்பது நமது உரிமை மற்றும் ஜனநாயகக் கடமை. எனவே, அனைவரும் தங்களது கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று கூறி வாழ்த்து தெரிவித்தாா். இந்த விடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.