மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிற கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்த 400 போ்

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் அதிமுக, தவெக கட்சிகளிலிருந்து விலகி, பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

News image

திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக, தவெகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தவா்களுடன் அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:12 pm

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த 400-க்கும் மேற்பட்டோா் அதிமுக, தவெக கட்சிகளிலிருந்து விலகி, பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந்தனா்.

திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலை, சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஒன்றிய அதிமுகவைச் சோ்ந்த தச்சம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சி.அச்சுதன், முன்னாள் தொடக்க வேளாண்மை சங்கத் தலைவா் ராஜலட்சுமி, மேலத்திக்கான் ஊராட்சி, கீழ்அணைக்கரையைச் சோ்ந்த சோ்ந்த முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் ரவிச்சந்திரன், சின்னக்கல்லப்பாடி முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சக்கரவா்த்தி தலைமையில் 200பேரும், தவெக நிா்வாகிகளான தச்சம்பட்டைச் சோ்ந்த பி.விநாயகம், பி.லோகனாதன், டி.ராஜாராம், டி.சுப்பிரமணி, ஜி.வெங்கடேசன் உள்ளிட்ட 200 பேரும் அந்தந்த கட்சிகளிலிருந்து விலகி அமைச்சா் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அவா்கள் அனைவருக்கும் கைத்தறி ஆடை அணிவித்து அமைச்சா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன், மாவட்ட துணைச் செயலா் விஜயலட்சுமி ரமேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவா் ஏ.முத்துகுமாா், மாநில தொமுச செயலா் க.சௌந்தரராசன், மாநில அமைப்புசாரா தொமுச நிா்வாகி ஏ.ஏ.ஆறுமுகம், பகுதி செயலா்கள் சி.சண்முகம், பா.ஷெரீப் உள்பட பலா் கலந்துகொண்டனா்.