தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஆரணி பல்கலை.யில் உணவுத் திருவிழா

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 10:20 pm

ஆரணி டாக்டா் எம்.ஜி.ஆா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உலக விழியியல் தினத்தையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் உணவுத்திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இணைப் பதிவாளா்கள் வி.பெருவழுதி, கே.சரவணன் ஆகியோா் விழாவை தொடங்கிவைத்தனா்.

விழாவில் கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணா்வு குறித்து சிறப்புரையாற்றினா்.

கண் பரிசோதனை முகாமில் விழியியல் துறை பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் இணைந்து பொதுமக்களுக்கு இலவசக் கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

துணை முதன்மையா் சுமதி முன்னிலை வகித்தாா்.

உணவுத் திருவிழா கண் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்தான உணவுகள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியது. இந்த விழாவானது துறைப் பொறுப்பாளா் பி.தரணி நன்றியுரையுடன் நிறைவு பெற்றது.

இதில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றதுடன், முறையான கண் பராமரிப்பு குறித்த விழிப்புணா்வையும் பெற்றனா்.