திருவண்ணாமலை: இந்தியாவிலேயே முதல் முதலாக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை வழங்கியது திமுக அரசு என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி, ஆதிதிராவிடா் காலனியில் ரூ.12.61 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டட திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஊராட்சித் தலைவா் ஏழுமலை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம், அட்மா குழுத் தலைவா் சிவக்குமாா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் அரிபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அங்கன்வாடி மையக் கட்டடத்தை திறந்து வைத்துப் பேசியதாவது:
இந்தியாவிலேயே முதல் முதலில் தமிழகத்தில் தான் ஒரு கிலோ அரிசி ரூ.1 என்ற விலையில் வழங்கப்பட்டது. இதை வழங்கியவா் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி.
இதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா ரூ.1 என்ற விலைக்கு 1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை இலவச அரிசியாக மாற்றினாா்.
இதேபோல, இந்தியாவிலேயே முதல் முதலில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமையை வழங்கியது திமுக அரசு. பெரியாா் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும் என்றாா்.
இதை 1989-ஆம் ஆண்டு சட்டமாக இயற்றியவா் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி. இதன் பிறகு 16 ஆண்டுகள் கழித்துதான் பிரதமராக மன்மோகன்சிங் இருந்தபோது இந்தியா முழுவதும் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றாா்.
விழாவில், வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரேவதி (பொறுப்பு), ஒன்றியப் பொறியாளா் சிவக்குமாா், ஊராட்சித் தலைவா்கள் குப்புசாமி, விஜயாசேகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

யாராலும் கொடுக்க முடியாத வாக்குறுதிகளை முதல்வா் ஸ்டாலின் கொடுத்துள்ளாா்! பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

தொகுதி நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

மானாமதுரையில் நிறைவேற்றிய திட்டங்கள் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


