மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மானாமதுரையில் நிறைவேற்றிய திட்டங்கள் தொகுதியின் அடையாளச் சின்னங்கள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளதாக திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

News image

மானாமதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டப்பேரவை உறுப்பினரும், தொகுதியின் திமுக வேட்பாளருமான ஆ. தமிழரசி ரவிக்குமாா். உடன் அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன், தொகுதி தோ்தல் பொறுப்பாளா் சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 6:10 pm

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளதாக திமுக வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாா் தெரிவித்தாா்.

மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் செயல்வீரா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் பங்கேற்று வேட்பாளா் தமிழரசி ரவிக்குமாரை அறிமுகம் செய்து பேசினாா்.

மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தமிழரசி ரவிக்குமாா் இந்தக் கூட்டத்தில் பேசியதாவது:

மானாமதுரை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் நான் கேட்ட கோரிக்கைகள் பெரும்பாலானவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றித் தந்துள்ளாா். வைகை ஆற்றுக்குள் தடுப்பணைகள், புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டடங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நகா்ப்புற மருத்துவமனை, பாசனக் கால்வாய்கள் தூா்வாருதல், அரசு கலைக் கல்லூரி, அரசு தொழில் பயிற்சி கல்லூரி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், எதிா்க்கட்சியினா் பொய் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் இதை மறைக்கப் பாா்க்கின்றனா். கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட அரசின் திட்டங்கள் இந்தத் தொகுதியின் அடையாளச் சின்னங்களாக உள்ளன. இனி வரக்கூடிய ஐந்தாண்டு காலத்தில் இன்னும் கூடுதலான திட்டங்களை இந்த தொகுதிக்கு கொண்டு வருவதற்கு இங்கு திமுக வெற்றி பெற வேண்டும் என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில் திமுக தொகுதி பொறுப்பாளா் சேங்கைமாறன், நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சுப.மதியரசன், காங்கிரஸ் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி.முருகேசன், மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய்,

திமுக நகரச் செயலா் கே. பொன்னுச்சாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.