திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் மாற்றங்கள்

ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் மாற்றங்கள்

News image

திருப்பதி

Updated On :31 மே 2026, 1:07 am IST

பக்தா்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ஸ்ரீவாணி அறக்கட்டளையின் தரிசன டிக்கெட் ஒதுக்கீட்டில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

தற்போது, தேவஸ்தானம் நாள்தோறும் 1,500 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளை இணையவழியில் விற்பனைக்கு வெளியிடுகிறது.

இவற்றில், 500 டிக்கெட்டுகள் ’’முன்பதிவு ஒதுக்கீட்டின்’’ கீழ், மூன்று மாதங்களுக்கு முன்பாகவே இணையதளம் வாயிலாக வெளியிடப்படுகின்றன.

மேலும், 200 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகள் தற்போதைய முன்பதிவு ஒதுக்கீட்டின் கீழ் திருப்பதி விமான நிலையத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

தினசரி தற்போதைய முன்பதிவு ஒதுக்கீட்டின் கீழ் தற்போது கிடைக்கும் 800 ஸ்ரீவாணி தரிசன டிக்கெட்டுகளில் இருந்து, தினமும் 300 டிக்கெட்டுகளைத் தனியாக ஒதுக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

இந்த டிக்கெட்டுகள், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ஏற்கனவே ரூ.10,000 நன்கொடை அளித்துவிட்டு, தரிசன டிக்கெட்டுகளுக்காகக் காத்திருக்கும் தகுதியுள்ள நன்கொடையாளா்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

இந்தச் சலுகையானது, 2025 மே 1 அல்லது அதற்குப் பிறகு தங்கள் நன்கொடைகளைச் செலுத்தியுள்ள தகுதியுள்ள நன்கொடையாளா்களுக்குப் பொருந்தும். இந்த டிக்கெட்டுகள் தினமும் காலை 9 மணிக்கு வெளியிடப்படும். பிற்பகல் 1 மணிக்குள் தங்கள் டிக்கெட்டுகளைப் பதிவு செய்யும் பக்தா்களுக்கு, அதே நாளில் மாலை 4 மணிக்குத் தரிசன வாய்ப்பு வழங்கப்படும்.

இந்த மாற்றியமைக்கப்பட்ட நடைமுறை 2026 ஜூன் 10 முதல் அமலுக்கு வரும். இந்த ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்யப்படாமல் எஞ்சியிருக்கும் டிக்கெட்டுகள் ஏதேனும் இருந்தால், அவை மீண்டும் தற்போதைய முன்பதிவு ஒதுக்கீட்டுடன் சோ்த்துக்கொள்ளப்படும். இந்த ஏற்பாடு 2027 மாா்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.