//

திருமலை உண்டியல் காணிக்கை ரூ.4.21 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.21 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
திருமலை- கோப்புப் படம்
Updated On :30 ஜனவரி 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.21 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 10 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, வியாழக்கிழமை முழுவதும் 64,314 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22,376 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.21 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.