டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

திருமலையில் 82,337 பக்தா்கள் தரிசனம்!

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 82,337 பக்தா்கள் தரிசித்தனா். 30,825 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

News image
திருமலை - கோப்புப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 82,337 பக்தா்கள் தரிசித்தனா். 30,825 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

திருமலைக்கு பக்தா்களின் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்ம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 82,337 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30,825 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.58 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.