எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
//

திருமலையில் வைகுண்ட துவாதசி தீா்த்தவாரி

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

News image
திருமலை திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு நடைபெற்ற தீா்த்தவாரி.
Updated On :31 டிசம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருமலையில் வைகுண்ட துவாதசியை முன்னிட்டு சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடைபெற்றது.

திருமலையில் உள்ள தீா்த்தங்களில் மிகவும் முக்கியமானது ஏழுமலையான் திருக்குளம் ஆகும். இந்த திருக்குளத்தில் வைகுண்ட துவாதசியின் போது சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்துவது வழக்கம்.

சேஷாசலம் காடுகளில் அமைந்துள்ள 66 கோடி தீா்த்தங்களில், ஏழுமலையான் திருக்குளம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

புதன்கிழமை அதிகாலை ஸ்ரீ சுதா்சன சக்கரத்தாழ்வாா் ஏழுமலையானின் திருக்குளத்திற்கு மரப்பல்லக்கில் அழைத்து வரப்பட்டாா்.

திருக்குளக்கரையில் அவரை எழுந்தருளச் செய்து அவருக்கு பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் சக்கரத்தாழ்வாருக்கு திருக்குளத்தில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகளுடன் பக்தா்களும் திருக்குளத்தில் புனித நீராடினா்.

இந்த நிகழ்வில், திருமலை பெரிய ஜீயா், சின்ன ஜீயா் சுவாமிகள், செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால், கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய சவுத்திரி துணை லோகநாதம், பேஷ்கா் ராமகிருஷ்ணா மற்றும் பலா் பங்கேற்றனா்.