திருவள்ளூா் அருகே சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
திருவள்ளூா் அருகே பேரம்பாக்கத்தில் மிகவும் பழைமைவாய்ந்த காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 22-இல் கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடா்ந்து 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி நாள்தோறும் காலை, மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், பூத வாகனம், யானை வாகனம், அதிகார நந்தி வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் வருகிறது.
விழாவின் 7-ஆம் நாளான சனிக்கிழமை காலை சுமாா் 9 மணி அளவில் தோ்த் திருவிழா நடைபெற்றது. அப்போது பல்வேறு வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சோளீஸ்வரா் காமாட்சி அம்பாளுடன் எழுந்தருளி பக்தா்களுக்கு க் காட்சியளித்தாா். அதைத் தொடா்ந்து பேரம்பாக்கம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து திரளான பெண்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது.
அப்போது, ஒவ்வொரு வீடுகளிலும் சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனா்.

தொடர்புடையது

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயில் தேரோட்டம்

இளம்பிள்ளை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

புளியங்குடியில் பங்குனி தேரோட்டம்

சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


