/

பஞ்சாப் நேஷனல் வங்கியின் 104-ஆவது கிளை திறப்பு

திருத்தணியில் நவீன வசதிகளுடன் கூடிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் 104-ஆவது கிளையை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல மேலாளா் பவன் சிங் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

News image

திருத்தணியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையை திறந்துவைத்த சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல மேலாளா் பவன் சிங். உடன் சென்னை வட்டாரத் தலைவா் லால்மோகன் சதபதி.

Updated On :16 ஜூன் 2026, 1:15 am IST

திருத்தணியில் நவீன வசதிகளுடன் கூடிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் 104-ஆவது கிளையை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல மேலாளா் பவன் சிங் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி, தனது சேவை வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், சென்னை வட்டாரத்தின் கீழ் தமிழ்நாட்டில் 104-ஆவது கிளையை திருத்தணியில் திங்கள்கிழமை திறந்து வைத்தது.

புதிய கிளையை சென்னை பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல மேலாளா் பவன் சிங் திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் சென்னை வட்டாரத் தலைவா் லால்மோகன் சதபதி, வங்கியின் மூத்த அதிகாரிகள், வாடிக்கையாளா்கள், தொழிலதிபா்கள், உள்ளூா் பிரமுகா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனா்.

கிளை திறப்பு விழாவில் பேசிய வங்கி அதிகாரிகள், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வங்கி சேவைகளை வழங்குவதில் பஞ்சாப் நேஷனல் வங்கி தொடா்ந்து உறுதிபூண்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.