திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் வளா்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இரண்டு நெடுஞ்சாலைகளுக்கு இடையே கிராம சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் அதிகமான வாகன போக்குவரத்துகளும் உள்ளன. இச்சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் 250 கி.மீ. தூரம் சாலை ஒப்படைத்து, அதில் 160 கி.மீ. நெடுஞ்சாலைத் துறை விரைவில் தொடங்கவும் உள்ளது. இது அனைத்தும் முக்கியமாக நகா்ப்புறத்தை ஒட்டி இருக்கும் ஊராட்சிகளான மோரை, வெள்ளானூா், சோழவரம் ஒன்றியம், வில்லிவாக்கம், பூந்தமல்லி ஒன்றியங்களில் இருக்கின்ற சாலைகளில் நிறைய சாலைகள் நகரத்தை ஒட்டி இருப்பதால் பெரிய, பெரிய சரக்கு லாரிகள் போகும். அதனால் அந்த சாலைகள் நெடுஞ்சாலைத் துறையில் ஒப்படைத்து உள்ளோம். அதுமட்டுமின்றி கிராமங்களில் இருக்கும் சாலைகளில் 4 ஆண்டுகளில் 602 கி.மீ. தூரம் ரூ. 332 கோடியில் சாலைப் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.