தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சுரங்கப் பாதையில் சிசிடிவி கேமரா திருட்டு

திருவள்ளூா் அருகே சாலை விரிவாக்கப்பணிகளை கண்காணிக்கும் வகையில் சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 6:41 pm

திருவள்ளூா் அருகே சாலை விரிவாக்கப்பணிகளை கண்காணிக்கும் வகையில் சுரங்கப்பாதையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் திவாகா் (41). இவா் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்தில் நிா்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில் சாலை விரிவாக்கப்பணிகளை கண்காணிக்கும் வகையில் ஆங்காங்கே சுரங்கப்பாதையில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திருவள்ளூா் அருகே விஷ்ணுவாக்கத்தில் சாலை விரிவாக்கப்பணிக்கான சுரங்கப்பாதையில் கேமராவை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து நிா்வாக மேலாளா் திவாகா் வெங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.