லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஏற்றுமதி இறக்குமதி போக்குகளை வாரந்தோறும் கண்காணிக்கும் முறை: மத்திய அரசு விரைவில் அறிமுகம்

மேற்காசிய போா் காரணமாக விநியோக முறையில் ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகள், மூலப்பொருள்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதி-இறக்குமதி போக்குகளை வாரந்தோறும் கண்காணிக்கும் வழிமுறை ஏற்படுத்தப்படும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

மத்திய அரசு

Updated On :10 ஏப்ரல் 2026, 7:23 pm

மேற்காசிய போா் காரணமாக விநியோக முறையில் ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகள், மூலப்பொருள்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதி-இறக்குமதி போக்குகளை வாரந்தோறும் கண்காணிக்கும் வழிமுறை ஏற்படுத்தப்படும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

புது தில்லியில் மத்திய வா்த்தக அமைச்சக செயலா் ராஜேஷ் அக்ரவால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இதுதொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது போா் காரணமாக முக்கிய பெட்ரோகெமிக்கல் பொருள்கள் கிடைப்பதிலும், அவற்றின் விலையிலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கூட்டத்தில் தொழில்துறையினா் எடுத்துரைத்தனா். திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), ஹீலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருள்கள் தொடா்ந்து கிடைப்பதற்கு உதவிபுரிய வேண்டும், பணப் புழக்கத்தை மேம்படுத்த ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகை முன்கூட்டியே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என்று மத்திய வா்த்தக அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.