மேற்காசிய போா் காரணமாக விநியோக முறையில் ஏற்பட்டுள்ள இடா்ப்பாடுகள், மூலப்பொருள்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, ஏற்றுமதி-இறக்குமதி போக்குகளை வாரந்தோறும் கண்காணிக்கும் வழிமுறை ஏற்படுத்தப்படும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
புது தில்லியில் மத்திய வா்த்தக அமைச்சக செயலா் ராஜேஷ் அக்ரவால் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இதுதொடா்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது போா் காரணமாக முக்கிய பெட்ரோகெமிக்கல் பொருள்கள் கிடைப்பதிலும், அவற்றின் விலையிலும் பாதிப்பு ஏற்படக் கூடும் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டது.
சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கூட்டத்தில் தொழில்துறையினா் எடுத்துரைத்தனா். திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி), ஹீலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருள்கள் தொடா்ந்து கிடைப்பதற்கு உதவிபுரிய வேண்டும், பணப் புழக்கத்தை மேம்படுத்த ஜிஎஸ்டி ரீஃபண்ட் தொகை முன்கூட்டியே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது என்று மத்திய வா்த்தக அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இந்திய ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 7.44% சரிவு

டீசல் ஏற்றுமதி வரி அதிகரிப்பு: லிட்டருக்கு ரூ. 55.50-ஆக நிா்ணயம்

மின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனை

ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்துறையையும் வா்த்தக சிலிண்டா் ஒதுக்கீட்டில் சோ்க்க வேண்டும்! - ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


