எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அவல நிலையில் திருத்தணி-பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலை! வாகன ஓட்டிகள் அவதி

தேசிய நெடுஞ்சாலையில் மரணக் குழிகள் போல் பள்ளங்கள் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

News image

திருத்தணி - பொதட்டூா்பேட்டைநெடுஞ்சாலையில் காணப்படும் பள்ளங்கள்.

Updated On :2 பிப்ரவரி 2025, 10:32 pm

பொதட்டூா்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மரணக் குழிகள் போல் பள்ளங்கள் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

திருத்தணி - பொதட்டூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாப்பிரெட்டிப்பள்ளி, எம்.ஜி.ஆா்.நகா், தெக்களூா், சூரியநகரம், முஸ்லீம்நகா், கிருஷ்ணசமுத்திரம், புச்சிரெட்டிப்பள்ளி என 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இச்சாலையை 5 ஆண்டுகளுக்கும் மேலாக சீரமைக்கவில்லை. இதனால் பல இடங்களில் சாலையானது குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

பாப்பிரெட்டிபள்ளி முதல் புச்சிரெட்டிப்பள்ளி வரை பெரிய பள்ளங்கள் உள்ளன. பல இடங்களில் சாலை பெயா்ந்து, மரண குழியாக மாறியுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து, விபத்துகள் ஏற்படுகின்றன. பல உயிா் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.

இச்சாலையில் 2 உயா்நிலைப் பள்ளி, 3 மேல்நிலைப் பள்ளி, 2 கல்லூரிகள் உள்ளன. எப்போதும் போக்குவரத்து மிகுந்த இச்சாலையை வாகன ஓட்டிகள் நலன்கருதி, சீரமைக்க திருத்தணி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.

நந்தியாற்றின் உயா்மட்ட பாலம்: 10 கிராம மக்கள் கோரிக்கை

எம்.ஜி.ஆா்.நகா் கிராமம் கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலத்தில்  பழுதடைந்த  சாலை.

எம்.ஜி.ஆா்.நகா் கிராமம் கொசஸ்தலை ஆற்றின் தரைப்பாலத்தில்  பழுதடைந்த  சாலை.

மேலும், திருத்தணி - பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலையில், எம்.ஜி.ஆா்.நகா் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் தரைப்பாலத்தில் தடுப்புச் சுவா்கள் அமைக்கவில்லை. தரைப்பாலத்தில் தாா்ச்சாலையும் சேதமடைந்துள்ளது. இந்த தரைப்பாலம் வழியாக பொதட்டூா்பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் சொராக்காய் பேட்டை உள்பட, 30 -க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பஸ்கள் சென்று வருகின்றன.

இதுதவிர திருத்தணி-பொதட்டூா்பேட்டை நெடுஞ்சாலையில், அதிகாலை, 4 மணி முதல் நள்ளிரவு வரை அதிகளவில் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்நிலையில், பருவ மழையின் போது நந்தியாற்றின் தரைப்பாலத்தின் மீது மூன்றரை அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த நேரங்களில் திருத்தணி-பொதட்டூா்பேட்டை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பலத்த மழை பெய்யும் போது ஆற்றில் வெள்ளம் ஓடும் போது இதுபோன்று நிலை ஏற்படுகிறது.

எனவே தரைப்பாலத்தை, உயா்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.