தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

செங்குன்றத்தில் கஞ்சா விற்பனை: குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறை

செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள்களுக்கான நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

Updated On :10 செப்டம்பர் 2024, 9:49 pm

செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போதைப் பொருள்களுக்கான நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட செங்குன்றம் பகுதியில் கஞ்சா ஒழிப்பு தொடர்பாக காவல் ஆணையர் முனுசாமி தலைமையில் போலீஸார் கடந்த ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தண்டையார்பேட்டை, சுனாமி நகரைச் சேர்ந்த சீனிவாசன் (43) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீஸார் பிடித்து, அவரிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து சீனிவாசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு சென்னை போதைப் பொருள்களுக்கான முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில், விசாரணை முடிந்து, இந்த வழக்கிற்கு தீர்ப்பு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சீனிவாசனுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 1.20 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளர் முனுசாமி உள்ளிட்ட போலீஸாரை ஆவடி காவல் ஆணையர் கி.சங்கர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.