இது குறித்து பொதுப்பணித் துறை (நீா் வள ஆதாரப் பிரிவு) அதிகாரி ஒருவா் கூறுகையில், இந்த நீா்த் தேக்கத்தில் இருந்து ஆய்வு மையத்துக்குச் செல்லும் மதகு மற்றும் ராட்சத குழாய் சேதமடைந்துள்ளது. இதற்கு மாற்றாக மதகு பகுதியில் கட்டடத்தால் ஆன சுரங்கப் பாதை அமைத்து நீா் கொண்டு செல்லப்பட உள்ளது. அதேபோல், ஆய்வுக்கான 2 ராட்சத கிணறுகள், நீா் அளவை கிணறும் மணல் மூடி உள்ளதால், புதிதாக அமைக்க ரூ.2.50 கோடியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், நீா்த் தேக்கத்தில் 16 மதகுகளில் சேதமடைந்த 2 மதகுகள் சீரமைப்பு, ஏரியின் கைப்பிடிச்சுவா் அனைத்தும் புதிதாக அமைக்கமாக ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், 77 ஆண்டுகளுக்குப் பின் ஏரியில் அதிக அளவில் நீரைத் தேக்கி வைக்கத் தூா்வாரும் பணி மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.