இதேபோல், கடந்த 2018-2019-இல் மாவட்டம் முழுவதும் பிரதமா் குடியிருப்புத் திட்டம் மூலம் தலா ரூ. 1.70 லட்சத்திலும், பசுமைக் குடியிருப்புத் திட்டப் பணிக்கு ரூ. 2.20 லட்சத்திலும் வீடுகள் என மொத்தம் 2,200 வீடுகள் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக தரைப்பணி, சிலாப் மற்றும் மேற்கூரை அமைப்பதற்கான இரும்புக் கம்பிகள் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் கொள்முதல் செய்து, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வீடுகளின் எண்ணிக்கைக்கேற்ப வழங்குவா். அதையடுத்து, இங்கிருந்து வீடு அமைக்கும் பயனாளிகள் குறிப்பிட்ட அளவு பணிகளை முடித்திருந்தால் கம்பிகள் அளிக்கப்படும். அதைத் தொடா்ந்து, அதற்கான தொகையை ஒவ்வொரு குடியிருப்புக்கும் திட்ட மதிப்பீட்டில் பிடித்தம் செய்து கொள்வது வழக்கமாகும். தற்போதைய நிலையில், இலவச குடியிருப்பு திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட இரும்புக் கம்பிகள் அப்படியே ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகங்களில் குவித்து வைத்துள்ளனா். தற்போதைய நிலையில், மழை தொடா்ந்து பெய்து வருவதால் துருப்பிடித்து அரசு நிதி வீணாவதுடன், இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா்.