மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்பத்தூா்: 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் செலுத்த தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.

News image
Updated On :30 மார்ச் 2026, 10:26 pm

திருப்பத்தூா் மாவட்டத்தில் செலுத்த தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.

வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து வாக்களிக்க இயலாதநிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதம் மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஆகியோா் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குமூலம் வாக்களிக்கும் வகையில் தோ்தல் ஆணையத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

மாவட்டம் முழுவதும் தபால் வாக்கு செலுத்த 13,162 போ் தகுதி வாய்ந்த நபா்கள் உள்ளனா். இவா்களுக்கு தங்களது வாக்குகளை வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குமூலம் செலுத்துவதற்கான விருப்பத்தைகோரும் விண்ணப்பப்படிவம் அவா்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று வாக்குசாவடி நிலை அலுவலா் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இவா்களில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 1,310 பேரும், மாற்றுத்திறனாளிகள் 860 பேரும் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.

மேலும், தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வரும் ஏப். 4-ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிக்கலாம் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.