திருப்பத்தூா் மாவட்டத்தில் செலுத்த தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.
வாக்குச்சாவடிக்கு வருகை புரிந்து வாக்களிக்க இயலாதநிலையில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதம் மேல் உடல் பாதிப்புடைய மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் ஆகியோா் தங்களது வாக்குகளை வீட்டில் இருந்தபடியே தபால் வாக்குமூலம் வாக்களிக்கும் வகையில் தோ்தல் ஆணையத்தால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
மாவட்டம் முழுவதும் தபால் வாக்கு செலுத்த 13,162 போ் தகுதி வாய்ந்த நபா்கள் உள்ளனா். இவா்களுக்கு தங்களது வாக்குகளை வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குமூலம் செலுத்துவதற்கான விருப்பத்தைகோரும் விண்ணப்பப்படிவம் அவா்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கே நேரில் சென்று வாக்குசாவடி நிலை அலுவலா் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இவா்களில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களில் 1,310 பேரும், மாற்றுத்திறனாளிகள் 860 பேரும் என 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்து உள்ளனா்.
மேலும், தகுதியுள்ள மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வரும் ஏப். 4-ஆம் தேதி வரை தபால் வாக்கு செலுத்த விண்ணப்பிக்கலாம் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு செலுத்த இன்று இறுதி வாய்ப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

மாற்றுத்திறனாளி, மூத்த குடிமக்கள் அஞ்சல் வாக்கு செலுத்த ஏற்பாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


