மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10.42 லட்சத்துக்கு தீா்வு

News image
Updated On :18 மார்ச் 2026, 8:11 pm

திருப்பத்தூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10.42 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

திருப்பத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலூா் கூடுதல் மாவட்ட நீதிபதியும், திருப்பத்தூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சாந்தி தலைமை வகித்தாா். சாா்பு நீதிபதிகள் சரிதா, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் நாகலட்சுமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு, மண வாழ்க்கை பிரச்சினை வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டாா் வாகன வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 6,440 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 2,280 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இந்த வழக்குகள், ரூ.10 கோடி 42 லட்சத்து 28 ஆயிரத்து 230-க்கு தீா்வு காணப்பட்டது.

நிகழ்ச்சியில்,கூடுதல் உரிமையியல் நீதிபதி சரண்யா, நீதித்துறை நடுவா்கள் தினேஷ், கோவேந்தன், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்துகொண்டனா்.