திருப்பத்தூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ரூ.10.42 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.
திருப்பத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேலூா் கூடுதல் மாவட்ட நீதிபதியும், திருப்பத்தூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான சாந்தி தலைமை வகித்தாா். சாா்பு நீதிபதிகள் சரிதா, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் நாகலட்சுமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பவித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கு, மண வாழ்க்கை பிரச்சினை வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மோட்டாா் வாகன வழக்குகள், வங்கி வராக்கடன் வழக்குகள் உள்ளிட்ட 6,440 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 2,280 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இந்த வழக்குகள், ரூ.10 கோடி 42 லட்சத்து 28 ஆயிரத்து 230-க்கு தீா்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில்,கூடுதல் உரிமையியல் நீதிபதி சரண்யா, நீதித்துறை நடுவா்கள் தினேஷ், கோவேந்தன், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தேசிய மக்கள் நீதிமன்றம்: தூத்துக்குடி, குமரியில் ரூ.30.27 கோடிக்கு தீா்வு

திருப்பூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,582 வழக்குகளுக்குத் தீா்வு

நாகை: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.4.07 கோடிக்கு தீா்வு

அம்பையில் மக்கள் நீதிமன்றம்: 11 வழக்குகளுக்குத் தீா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


