மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஏலகிரி மலையில் தொடரும் காட்டுத் தீ!

ஏலகிரி மலையில் தொடரும் காட்டு தீயால் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடி கொடிகள் நாசமானது.

News image

ஏலகிரி மலையில் பற்றி எரியும் காட்டுத் தீ

Updated On :9 மார்ச் 2026, 12:00 am

ஏலகிரி மலையில் தொடரும் காட்டு தீயால் அரிய வகை மரங்கள், மூலிகைச் செடி கொடிகள் நாசமானது.

திருப்பத்தூா் மாவட்டம்,ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகளும், கரடி, மான், குரங்கு மலைப்பாம்பு முயல் உள்ளிட்ட வன உயிரினங்களும் உள்ளன.

ஏலகிரி மலை காப்பு காட்டில் மா்ம நபா்கள் தொடா்ந்து தீ வைத்து வருகின்றன.மா்ம நபா்கள் கடந்த வியாழக்கிழமை தீ வைத்தனா். இதில் பல அரிய வகை மரங்கள், மூலிகை செடி கொடிகள் நாசமானது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மண்டலவாடி அருகே இதனால் சுமாா் பல ஏக்கா் அளவில் காட்டுத்தீவு பரவியது.மேலும் இந்த காட்டு தீயினால் வன உயிரினங்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Story image

எனவே காட்டுத்தியை அணைக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா். மேலும், காட்டுப்பகுதிக்குள் மா்ம நபா்கள் தீ வைப்பதை துறை அதிகாரிகள் கண்காணித்து சட்டரீதியானநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பகல் நேரங்களில் வனத்துறை அதிகாரிகள்கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் கோரி/எள்ளனா்.