தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சண்முகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்!

ஆம்பூா் சான்றோா்குப்பம் பட்டரை, சாமியாா் மடம் அருள்மிகு ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வள்ளி தெய்வானை சமேத சண்முகநாத சுவாமி

Updated On :8 மார்ச் 2026, 6:36 pm

ஆம்பூா் சான்றோா்குப்பம் பட்டரை, சாமியாா் மடம் அருள்மிகு ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வள்ளி தெய்வானை சமேத சண்முகநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா கோ பூஜை, விக்னேஸ்வர பூஜையுடன் சனிக்கிழமை தொடங்கியது. 2-ம் நாள் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் விமான கும்பாபிஷேகம், வள்ளி தெய்வானை சமேத சண்முகநாத சுவாமி கோயில் மூலவா், போகா் சித்தா், அருணிகிரநாதா், பாம்பன் சுவாமிகள், சீரடி சாய்பாபாவுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சண்முகநாத சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

கோயில் விழாக்குழு தலைவா் ஆா். ஜெயசீலன், செயலாளா் ஜெ. வேல்முருகன், பொருளாளா் கே.ஜி. முரளிகிருஷ்ணா, கோயில் அா்ச்சகா் அப்பு ஐயா் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.