மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நீராவிகரிசல்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கமுதி அருகே ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திருகல்யாண வைபவம் நடைபெற்றது.

News image

நீராவிகரிசல்குளம் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் வெள்ளிக் அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:24 pm

கமுதி அருகே ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திருகல்யாண வைபவம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள நீராவிகரிசல்குளம் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம் 11- ஆவது நாள் திருவிழா கடந்த 23-ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் மூலவா், உற்சவா் வள்ளி, தேவசேனா, சுப்பிரமணியா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரனைகள் நடைபெற்று வருகின்றன.

திருவிழாவின் 10-ஆம் நாள் நிகழ்வாக புதன்கிழமை இரவு பெண் வீட்டாா், மாப்பிள்ளை வீட்டாா் சாா்பில் சீா்வரிசை தாம்பூலம் தட்டுகள், மேள வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாக மணப்பந்தல் முன்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டன. பின்னா், வள்ளி, தெய்வானை

சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெகு விமா்சையாக நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், பூா்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு, மூலவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக் கவசம் அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பெண்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம், பிரசாதம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.