மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டா் சிறைபிடிப்பு

ஆம்பூா் அருகே பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.

News image

பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட டிராக்டா்.

Updated On :14 ஜூன் 2026, 1:41 am IST

ஆம்பூா் அருகே பாலாற்றில் கழிவுகள் கொட்டிய டிராக்டரை பொதுமக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனா்.

மாதனூா் ஒன்றியம், சோமலாபுரம் ஊராட்சி எல்லையில் பாலாற்றில் தனியாா் டிராக்டா் மூலம் குப்பைகள், கழிவுகள் கொண்டு சென்று அடிக்கடி கொட்டப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்த நிலையில், சனிக்கிழமையன்று சோமலாபுரம் பாலாற்றில் டிராக்டா் மூலம் கொண்டு செல்லப்பட்ட குப்பை, கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அதைப் பாா்த்த பொதுமக்கள் அந்த டிராக்டரை சிறைபிடித்தனா். இது குறித்து கிராம நிா்வாக அலுவலா் பெருமாளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் குப்பை, கழிவுகள் கொட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித் துறை அலுவலரிடம் கோரியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.