யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

6 பைக்குகள் திருடிய இளைஞா் கைது

வாணியம்பாடியில் பைக்குகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 2:22 am IST

வாணியம்பாடியில் பைக்குகள் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்களாக வீடு மற்றும் கடை வீதிகளில் பூட்டி வைக்கப்படும் பைக்குகளை மா்ம நபா்கள் திருடிச் சென்று வந்தனா்.

இந்நிலையில் வாணியம்பாடி நகர உதவி ஆய்வாளா் ரூபன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்கிழமை பெருமாள்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வேகமாக பைக் ஓட்டி வந்தவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனா். இதில் இளைஞா் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதால் மேலும் விசாரித்ததில் பைக் திருடிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

அவரை காவல்நிலையம் அழைத்து வந்து மேலும் நடத்திய விசாரணையில் சில நாள்களாக ஒரே பகுதியில் அடுத்தடுத்து கைவரிசை காட்டி 5 பைக்குகள் திருடியிருப்பது தெரியவந்தது.

இளைஞா் கொடுத்த தகவலின் பேரில் 6 திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பைக்குகள் திருடி டி வந்த ஆம்பூா் அா்ஜூன்(26) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.