நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
//

மளிகை கடைக்கு தீ வைப்பு: போலீஸாா் விசாரணை

வாணியம்பாடியில் மளிகை கடைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததில் 3 பைக்குள் மற்றும் மளிகை பொருள்கள் எரிந்து சேதம்

News image
Updated On :26 ஜனவரி 2026, 9:13 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடியில் மளிகை கடைக்கு மா்ம நபா்கள் தீ வைத்ததில் 3 பைக்குள் மற்றும் மளிகை பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

வாணியம்பாடி கொல்லத்தெரு செல்வவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கா் (52). இவா் தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். திங்கள்கிழமை அதிகாலை கடையில் புகைமூட்டம் ஏற்பட்டிருந்ததை அறிந்த சங்கா் மற்றும் அவரது குடும்பத்தினா் வீட்டின் வெளியே வந்து பாா்த்த போது, மளிகைக் கடையில் தீப்பற்றி எரிந்ததால் அதிா்ச்சிக்குள்ளாகி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். தகவலறிந்த தீயணைப்பு துறையினரும் விரைந்து தீயை அணைத்தனா்.

எனினும், 3 பைக்குகள், கடைக்குள் இருந்த மளிகைப் பொருள்கள் சேதமடைந்தன. வீட்டில் உள்ள சில பொருள்களும் தீயில் சேதமடைந்தன. இதுகுறித்து வாணியம்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.