//

வேலூா் மாவட்ட உழவா் சந்தைகளில் 211 டன் காய்கறிகள் விற்பனை

பொங்கல் பண்டிகையை ஒட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் சுமாா் 211 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகையை ஒட்டி வேலூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகளில் சுமாா் 211 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.

வேலூா் மாவட்டத்தில் வேலூா் டோல்கேட், காதகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, போ்ணாம்பட்டு ஆகிய 6 இடங்களில் உழவா் சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த உழவா் சந்தைகளில் பொங்கல் பண்டிகையை ஒட்டி ரூ.88.37 லட்சம் மதிப்பிலான சுமாா் 211 டன் காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.