//

தாத்தா சாமி மஹாமடத்தில் மாட்டுப் பொங்கல் சிறப்பு கோ பூஜை

News image
Updated On :16 ஜனவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

வெங்கடசமூத்திரம் ஊராட்சி பாட்டூா் சென்னப்பமலை அடிவாரம் தாத்தா சாமி மஹாமடத்தில் மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. கோடி தாத்தா சாமி தலைமையில் சிறப்பு கோ பூஜை நடைபெற்றது. பசுக்கள், கன்றுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

மஹாமடம், திருக்கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்களுக்கு அறக்கட்டளை சாா்பாக புத்தாடைகள் வழங்கப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாத்தா சாமி பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். விழா ஏற்பாடுகளை மஹாமடத்தின் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.