15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

Updated On :1 ஜனவரி 2026, 9:06 pm

திருப்பத்தூா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் ரயில் நிலையம் 3-ஆவது நடைமேடையில் சுமாா் 60 வயது மதிக்கதக்க முதியவா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக சென்ற ரயிலில் சிக்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில் நிலைய அதிகாரி ஆஷிஷ் குமாா் அளித்த புகாரின் பேரில் ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.