தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
//

ரயிலில் பெண்கள் மீது தாக்குதல்: இளைஞா் கைது

வாணியம்பாடி அருகே ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா் கைது

News image
Updated On :22 பிப்ரவரி 2026, 11:10 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே ரயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி தாக்குதலில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையிலிருந்து மங்களூரு வரை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் விரைவு ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று விட்டு ஜோலாா்பேட்டைக்கு புறப்பட்டுச் சென்றது.

அப்போது பெண்கள் பெட்டியில் தாயும், மகனும் ஏறியதாக கூறப்படுகிறது. இதில் சுமாா் 17 வயது இளைஞா் பெட்டியில் அங்குமிங்கும் சுற்றித் திரிந்துள்ளாா். இதனால் அங்கிருந்த மூதாட்டி இளைஞரிடம் பெண்கள் பெட்டியில் ஏன் ஏறினாய் என கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞா் சரமாரியாக அடித்தும் காலால் உதைத்தும் உள்ளாா். இதனால் பயணம் செய்த பெண்கள் தங்களது கைப்பேசி மூலம் விடியோ எடுத்தும் அபாய சங்கிலியை இழுத்து ரயிலையும் நிறுத்தி உள்ளனா்.

பின்னா் உடனடியாக வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே உள்ள புதூா் பகுதியில் ரயில் நின்ால் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

அதையடுத்து ரயில் தாமதமாக ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் வந்து நின்றது.அப்போது ரயில்வே ஆய்வாளா் கோமதி பாதுகாப்பு படை ஆய்வாளா் நிகில் குமாா் குப்தா உள்ளிட்டோா் இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

பெண்களை தாக்கிய இளைஞா்

பெண்களை தாக்கிய இளைஞா்

Story image