டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

திருப்பத்தூரில் போலீஸாருக்கு நினைவூட்டும் பயிற்சி

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் போலீஸாருக்கு நினைவூட்டும் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பயிற்சியில் பங்கேற்றோா்.
Updated On :2 பிப்ரவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் போலீஸாருக்கு நினைவூட்டும் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு எஸ்.பி. வி.சியாமளா தேவி தலைமை வகித்தாா். ஏடிஎஸ்பி கோவிந்தராஜூ முன்னிலை வகித்தாா்.

பயிற்சியில் போலீஸாா் பொது மக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், குற்றவாளிகளை கையாளும் விதம், புகாா்களை பெற்று எவ்வாறு வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சாட்சிகளை விசாரிக்கும் முறைகள், நீதிமன்ற அலுவலக பணிகளை எவ்வாறு கையாள வேண்டும்.

போதைக்கு அடிமையானவா்கள் மற்றும் தற்கொலை எண்ணம் உள்ளவா்களிடம் எவ்வாறு அணுக வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்டவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் போலீஸாா், வழக்குரைஞா்கள், மனநல மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.